முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தார். துவக்க வீரர்கள் சிம்மன்ஸ் மற்றும் கவுதம் இருவரும் அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தனர். 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த கவுதம், அதே ஓவரிலேயே பத்ரியின் பந்தில் வீழ்ந்தார்.
அடுத்து களமிறங்கிய ராயுடு, சிம்மன்ஸுடன் இணைந்து அதிரடியைத் தொடர்ந்தார். 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 38 ரன்களை எடுத்திருந்தபோது அஸ்வினின் பந்தில் சிம்மன்ஸ் ஆட்டமிழந்தார்.
38 பந்துகளில் ராயுடு அரை சதத்தை அடைய, ரோஹித் சர்மா 19 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய பொல்லார்ட் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க முற்பட்டு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அம்பாதி ராயுடு 59 ரன்களுக்கு (43 பந்துகள், 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார்.
களத்தில் இருந்த தாரே, ஆண்டர்சன் இணை கடைசி இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் சேர்த்தது. 20-வது ஓவரின் கடைசி பந்தில் தாரே ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்தது.