விளையாட்டு

ஜோகோவிச், ஷரபோவா சாம்பியன்

ஏஎஃப்பி

இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச்சும், மகளிர் பிரிவில் மரியா ஷரபோவாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

இறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர் லாந்தின் ரோஜர் பெடரரை, ஜோகோவிச் எதிர்கொண்டார். இதில் 6-4,6-3 என்ற நேர் செட் களில் ஜோகோவிச் எளிதாக வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது இப்போட் டியில் அவர் வெல்லும் 4-வது பட்டமாகும்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுரஸ்ஸை எதிர்கொண்டார். இதில் 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை ஷரபோவா இழந்தார். எனினும் அடுத்த சுற்று களில் சுதாரித்து விளையாடிய அவர், 7-5, 6-1 என்ற கணக்கில் அவற்றை கைப்பற்றி, போட்டியில் வென்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் தனதாக்கினார்.

இந்த ஆண்டில் பிரிஸ்பென் ஓபன் டென்னிஸில் பட்டம் வென்ற பிறகு ஷரபோவா வெல்லும் 2-வது பட்டம் இதுவாகும். இப்போட்டி குறித்து கருத்துத் தெரிவித்த அவர்,

‘இறுதி ஆட்டத்தின் தொடக்கத்தில் நான் அதிகம் தவறுகளை செய்தேன். எனினும் அடுத்த இரு செட்களிலும் அதனை திருத்திக் கொண்டேன். இந்த வெற்றி மிகுந்த தன்னம்பிக்கையை அளித்துள்ளது’ என்றார்.

SCROLL FOR NEXT