அடுத்து களமிறங்கிய ரெய்னா, ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆட ஆரம்பித்தார். டெல்லி வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் பவுண்டரிகள் கட்டுப்படுத்தப்பட்டன. 28 பந்துகளில் 29 ரன்கள் அடித்த ஸ்மித் நதீம் பந்தில் வீழ்ந்தார்.
மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த ரெய்னா, 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். 56 ரன்களுக்கு அவர் ஆட்டமிழக்க, ப்ளெஸ்ஸி , தோனியுடன் இணைந்தார். இந்த இணையால் சென்னை 150 ரன்களைக் கடந்தது. ப்ளெஸ்ஸி 17 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24 ரன்களுக்கும், தோனி 15 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 32 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் எடுத்தது. அதிகபட்சமாக ரெய்னா 56 ரன்கள் எடுத்தார்.