விளையாட்டு

பிலிப் ஹியூஸ் மரணத்தை அடுத்து 2-வது பயிற்சி ஆட்டம் ரத்து

பிடிஐ

நாளை(வெள்ளி) நடைபெறுவதாக இருந்த இந்திய அணியின் 2-வது பயிற்சி ஆட்டம் பிலிப் ஹியூஸ் மரணத்தை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பயிற்சி அமர்வு முடிந்து வலைப்பயிற்சிக்கு தயாரான நிலையில் அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி மைதானத்திற்கு வந்து பிலிப் ஹியூஸ் மரணமடைந்த செய்தியை அறிவித்தார்.

உடனடியாக வீரர்கள் அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

பிலிப் ஹியூஸ் குடும்பத்திற்கு இந்திய அணி தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது:

“இந்தத் துயரத்திலிருந்து அவர்கள் மீள கடவுள் கைகொடுப்பார். சக கிரிக்கெட் வீரர்களாக கிரிக்கெட் ஆட்டத்திற்கு பிலிப் ஹியூஸ் செய்த பங்களிப்பை பெரிதும் மதிக்கிறோம்” என்றனர்.

SCROLL FOR NEXT