விளையாட்டு

ஐபிஎல் வீரர்கள் ஏலம் தேதி அறிவிப்பு: ஜெய்பூரில் நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

ஐபிஎல் 2019 போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா இல்லையா என்பது இன்னும் முடிவாகாத நிலையில் 2019 ஐபிஎல் வீரர்கள் ஏலத்துக்கான தேதியை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 18ம் தேதி ஜெய்பூரில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 70 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளனர், 50 இந்திய வீரர்கள், 20 அயல்நாட்டு வீரர்கள் ஏலத்தில் களம் காண்கின்றனர்.

ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்துக்கு தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு இருப்பதால் டி.ஆர்.பி ரேட்டிங் எகிறும், அதனால் விடுமுறை நாட்களில் வைக்கலாம் என்று முன்பு பரிசீலிக்கப்பட்டது.

ஆனால் இப்போது வார நாள் என்பதோடு பெர்த் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 11 வீரர்களை ஏற்கெனவே விடுவித்துள்ளதால் நிறைய பணம் உள்ளது. மாறாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 வீரர்களைத் தக்கவைத்ததால் 2 வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க முடியும். சி.எஸ்.கேயிடன் ரூ.8.4 கோடி உள்ளது.

கொல்கத்தா அணி சில அயல்நாட்டு வீரர்களை ஏலம் எடுக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 இந்திய வீரர்கள் 2 அயல்நாட்டு வீரர்களை ஏலம் எடுக்கவுள்ளது.

இம்முறை இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஐபிஎல் அணி உரிமையாளர்கள் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் 2019 உலகக்கோப்பை இருப்பதால் இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT