சாக்ஸ்டன்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி நெல்சன் பகுதியிலுள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணியின் டெவன் கான்வே 56, டிம் ராபின்சன் 23, ரச்சின் ரவீந்திரா 26, டேரில் மிட்செல் 41, மைக்கேல் பிரேஸ்வெல் 11 ரன்கள் எடுத்தனர்.
178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 19.5 ஓவர்களில் 168 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
அமிர் ஜாங்கு 5, அலிக் அத்தனாஸ் 31, ஷாய் ஹோப் 1, அகீம் ஆகஸ்ட் 24, ஷெர்பான் ருதர்போர்ட் 2, ரோமன் பாவெல் 2, ஜேசன் ஹோல்டர் 3, ரொமாரியோ ஷெப்பர்ட் 49, மேத்யூ போர்ட் 4 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து நியூஸிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் நியூஸிலாந்து அணி தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.