சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ராதிகா சுதந்திர சீலன், ஆஸ்திரேலியாவின் கரேன் ப்ளூமை எதிர்த்து விளையாடினார்.
22 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ராதிகா 11-8, 11-7, 11-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.