விளையாட்டு

மே.இ.தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான்!

செய்திப்பிரிவு

டிரினிடாட்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.

டிரினிடாட்டில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 49 ஓவர்களில் 280 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக லீவிஸ் 62 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், கேப்டன் ஷாய் ஹோப் 55, ராஸ்டன் சேஸ் 53, மோதி 31 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் ஷாகீன் ஷா அப்ரீடி 4, நசீம் ஷா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

281 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 48.5 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 284 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. ஹசன் நவாஸ் 54 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 63 ரன்​களும், ஹூசைன் தலத் 41 ரன்களும் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். முன்​ன​தாக ரிஸ்​வான் 53, பாபர் அஸம் 47 ரன்​களில் வெளியேறினர்.

5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற பாகிஸ்​தான் அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது.

SCROLL FOR NEXT