பால்ராஜ் பன்வார் 
விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்: கால் இறுதியில் பால்ராஜ் பன்வார்

செய்திப்பிரிவு

ஒலிம்பிக் போட்டியின் படகு வலித்தல் விளையாட்டின் கால் இறுதிச் சுற்றில் விளையாட இந்திய வீரர் பால்ராஜ் பன்வார் தகுதி பெற்றார். நேற்று நடைபெற்ற படகு வலித்தல் ரெப்பேஜ் பிரிவில் பால்ராஜ் பன்வார் பங்கேற்றார்.

இந்த போட்டியில், 7:12.41 நிமிடங்களில் இலக்கை எட்டி 2-வது இடம் பிடித்த பால்ராஜ் பன்வார், கால் இறுதிக்கு தகுதி பெற்றார். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பல்ராஜ் பன்வார், ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT