விளையாட்டு

ஜான்சன் அடித்த அதிரடி சிக்ஸர்: வர்ணனையாளர் அறை கண்ணாடி உடைப்பு

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சன் அடித்த சிக்ஸரால் வர்ணனையாளர்கள் அறையில் இருந்த கண்ணாடி உடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம், ஹராரேவில் நேற்று நடந்தது.

ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது, 49-வது ஓவரின் மூன்றாவது பந்தை அந்த அணியின் வீரர் மிட்சல் ஜான்சன் சந்தித்தார். பன்யங்கரா வீசிய அந்த பந்தை, ஜான்சன் நேராக சிக்ஸருக்கு விளாச, பந்து நேராக வர்ணனையாளர்கள் உட்கார்ந்திருந்த அறையை நோக்கி உயரச் சென்று, அங்கிருக்கும் கண்ணாடியை உடைத்தது.

வர்ணனை செய்து கொண்டிருந்த நீல் மான்த்ராப் மற்றும் பேங்க்வா ஆகியோர் அதிர்ச்சியுற்றனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உடைந்த கண்ணாடித் துகள்களை பேங்க்வா மேஜையிலிருந்து சிரித்துக் கொண்டே அப்புறப்படுத்தினார்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 198 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT