திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தங்க கோபுரத்துக்கு ஊற்றப்பட்ட புனிதநீர். (அடுத்த படம்) சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள்.

 
ஆன்மிகம்

திருக்கோஷ்டியூர் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அருகே திருக்​கோஷ்டியூரில் சிவகங்கை தேவஸ்​தானத்துக்கு உட்​பட்ட சவுமிய நாராயணப் பெரு​மாள் கோயில் உள்​ளது. 108 வைணவத் தலங்​களில் ஒன்​றான இக்கோயில் மூலவர் கோபுரம் 108 அடி உயரத்​தில் அஷ்​டாங்க விமான​மாக உள்​ளது.

இது ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மந்​திரத்தை உணர்த்​தும் வகை​யில் 3 தளங்​களாக உள்​ளன. இதில் உச்​சி​யில் உள்ள தளமான முதல் நிலைக்கு தங்​கத் தகடு வேயும் திருப்​பணி நடை​பெற்​றது. மொத்​தம் 32 கிலோ அளவி​லான தங்​கத் தகடு வேயப்​பட்​டது. திருப்​பணி முடிந்த நிலை​யில் நேற்று கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது.

          

இதையொட்​டி, கடந்த 1-ம் தேதி முதல் பல்​வேறு சிறப்பு பூஜைகள், ஹோமங்​கள் நடை​பெற்​றன. நேற்று காலை 8 மணிக்கு யாக​சாலை​யி​லிருந்து கடம் புறப்​பாடு நடை​பெற்​றது. காலை 9.55 மணிக்கு மூல​வர் தங்க விமான கும்​பத்​தில் புனித நீர் ஊற்றி கும்​பாபிஷேகம் நடை​பெற்​றது.

அமைச்​சர் கேஆர்​.பெரிய கருப்​பன், சிவகங்கை தேவஸ்​தான பரம்​பரை அறங்​காவலர் மது​ராந்​தகி நாச்​சி​யார், மேலா​ளர் இளங்​கோ, இலங்கை முன்​னாள் அமைச்​சர் செந்​தில் தொண்​டமான், அறக்​கட்​டளைத் தலை​வர்காந்​தி, திருப்​பணி​கள் குழுத் தலை​வர் ராஜ்மோகன் அருணகிரி, துணைத் தலை​வர் ரவிச்​சந்​திரன், செய​லா​ளர் ராம் பட்​டாச்​சா​ரியர், பொருளாளர் கதிர்​வேலன், கவுர​வத் தலை​வர்​கள் மணி​கண்​டன், ராமேசுவரன், பெரு​மாள் உள்ளிட்டோர் பங்​கேற்​றனர்.

SCROLL FOR NEXT