ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் பகல்பத்து உற்சவத்தின் கடைசி நாளான நேற்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத் தில் சேவை சாதித்த நம்பெருமாள். | படம்: ர.செல்வமுத்துகுமார் |

 
ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: மோகினி அலங்காரத்தில் சேவை சாதித்த நம்பெருமாள்

இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு கோலாகலம்

செய்திப்பிரிவு

திருச்சி: ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வாக நேற்று நாச்​சி​யார் திருக்​கோலம் எனப்​படும் மோகினி அலங்​காரத்​தில் நம்​பெரு​மாள் சேவை சாதித்​தார். இதில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​றனர்.

ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயி​லில் பிரசித்தி பெற்ற வைகுண்ட ஏகாதசி பெரு​விழா டிச.19-ல் திருநெடுந்​தாண்​டகம் உற்​சவத்​துடன் தொடங்கியது. உற்​சவத்​தின் 10-ம் நாளான நேற்று நாச்​சி​யார் திருக்​கோலம் எனப்​படும் மோகினி அலங்​காரத்​தில் நம்​பெரு​மாள் மூலஸ்​தானத்​தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்​பாடு கண்​டருளி​னார்.

சவுரி சாயக்​கொண்டை சாற்​றி, அதில் கலிங்​கத்​து​ராய், சூர்ய - சந்​திர வில்​லை, சிவப்​புக்​கல் நெற்​றிப்​பட்​டை, முத்​துப்​பட்​டையை பக்​க​வாட்​டில் கொண்​டை​யில் அணிந்​து, காதில் வைர மாட்​டல், தோடு, ஜிமிக்​கி, வலது திரு​மூக்​கில் மூக்​குத்தி அணிந்​து, திரு​மேனி​யில் பங்​குனி உத்​திர பதக்​கம், தாயார் வைரத் திரு​மாங்​கல்​யம், தொங்​கல் பதக்​கம், வரிசை​யாக அடுக்கு பதக்​கங்​கள், பெரிய பவழ மாலை, காசு மாலை, 2 வட‌முத்து மாலை, வலது திருக்​கை​யில் தங்க கோலக்​கிளி, இடது திருக்​கை​யில் வரிசை​யாகவில்வ பத்​ரம், தாயத்து சரங்​கள், வளை​யல், பவழ கடிப்​பு, வில்வபத்ர தொங்​கல் சாற்​றி, திரு​வடி​யில் - சதங்​கை, தண்டை அணிந்​ திருந்​தார்.

பின் சேவை​யாக, பின்​னல் ஜடை, அதன்​மேல் ஜடை தாண்டா, திரு​முடி​யில் கல் இழைத்த ராக்​கொடி, ஜடைக்கு மேல் நாகம் வைத்த கல் இழைத்த ஜடை தாண்​டா, புஜ கீர்த்​தி, கச்சு எடுத்து கட்​டி, அதில் அரைச் சலங்கை தொங்க விட்​டுக்​கொண்​டு, ரங்​கூன் அட்​டிகை, ஒட்​டி​யாணம் உள்​ளிட்ட திரு​வாபரணங்​கள் அணிந்​திருந்​தார்.

மேலும், வெண்​பட்டு உடுத்​தி, வலது திரு​வடியை மடித்து அமர்ந்​தும், இடது திரு​வடியை, திருக்கை தாங்க அமர்ந்​தும், அர்ச்​சுன மண்​டபத்​தில் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு சேவை சாதித்​தார். ஆண்​டுக்​கொரு முறை மட்​டுமே நம்​பெரு​மாள் நாச்​சி​யார் கோலத்​தில் சேவை சாதிப்​பார் என்​ப​தால் நேற்று பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் நம்​பெரு​மாளை தரிசனம் செய்​தனர்.

விழா​வின் மிக முக்​கிய நிகழ்​வான பரமபத வாசல் எனப்​படும் சொர்க்​க​வாசல் திறப்பு இன்று (டிச.30) அதி​காலை 5.45 மணிக்கு நடை​பெறுகிறது. இதனால் ஸ்ரீரங்கம் கோயில் வளாகம் மற்​றும் கோபுரங்​கள் மின்​விளக்​கு​கள் மற்​றும் மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளன. இன்று லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் திரண்டு வரு​வார்​கள் என்​ப​தால் ஸ்ரீரங்கம் பகுதி முழு​வதும் விழாக்​கோலம் பூண்​டுள்​ளது.

SCROLL FOR NEXT