கோப்புப் படம்

 
ஆன்மிகம்

சபரிமலையில் நாளை நடை திறப்பு

செய்திப்பிரிவு

கம்பம்: மூல​வர் சிலை பிர​திஷ்டை தின சிறப்பு வழி​பாட்​டுக்​காக சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நாளை (மே 25) மாலை நடை திறக்​கப்பட உள்​ளது.

மூல​வர் சிலை பிர​திஷ்டை தின சிறப்பு வழி​பாட்​டுக்​காக மீண்​டும் நாளை (மே 25) மாலை கோயில் கரு​வறை திறக்​கப்பட உள்​ளது. அன்று பக்​தர்​களுக்கு தவக்​கோல விபூதி பிர​சாத​மாக வழங்​கப்​படும்.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் எது​வுமின்றி நடை சாத்​தப்​படும். பின்​னர் 26-ம் தேதி அதிகாலை நிர்​மால்ய பூஜை, கணபதி ஹோமத்​துடன் வழி​பாடு​கள் தொடங்​கும். பின்பு நெய் அபிஷேகம் உள்​ளிட்ட சிறப்பு பூஜைகள் நடை​பெறும். அன்று முழு​வதும் சிறப்பு வழி​பாடு​கள் நடை​பெற்ற பிறகு இரவில் நடை சாத்​தப்​படும்.

இதற்​கான முன்​ப​திவு​கள் கடந்த வாரமே தொடங்​கியது. ஒரு​நாள் வழி​பாடு என்​ப​தால் கூட்​டம் அதி​கம் இருக்​காது. நிதான​மாக தரிசனம் செய்​ய​லாம் என்​ப​தால் பலரும் ஆர்​வ​முடன் முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT