சபரிமலை | கோப்புப் படம்
குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமை வகித்தார்.
மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறப்பு வழிபாடு செய்து, மங்கல இசை முழங்ககோயில் நடையை திறந்து வைத்தார். ஐயப்பனின் தவக்கோலம் மாற்றப்பட்டு, விஹ்ரகம் மீது பூசப்பட்டிருந்த விபூதி பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஆழிக்குண்டத்தில் ஜோதி ஏற்றப்பட்டது. அதையடுத்து, தரிசனத்துக்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, இன்று காலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் தொடங்குகின்றன. தொடர்ந்து, வரும் 19-ம் தேதி இரவு கோயில் நடை அடைக்கப்படும்.