ஆன்மிகம்

உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியது

செய்திப்பிரிவு

புரி: உல​கப் புகழ்​பெற்ற புரி ஜெகந்​நாதர் கோயில் ரத யாத்​திரை நேற்று கோலாகல​மாக தொடங்​கியது.

ஒடிசா மாநிலம் புரி​யில் 12ம் நூற்​றாண்டு ஜெகந்​நாதர் கோயில் உள்​ளது. இக்​கோயி​லில் ஜெகந்​நாதர் (மகா விஷ்ணு), பாலபத்​திரர் (பல​ராமர்), சுபத்ரா தேவி (ஸ்ரீ கிருஷ்ணரின் தங்​கை) ஆகியோர் மூல​வர்​களாக அருள் பாலிக்​கின்​றனர்.

இக்​கோயி​லில் ஆண்​டு​தோறும் 9 நாட்​கள் நடை​பெறும் ரத யாத்திரை உலகப் புகழ்​ பெற்​ற​தாகும். இந்த வரு​டாந்​திர ரத யாத்திரை​யில் ஜெகந்​நாதரும் அவரது இரு உடன் ​பிறப்​பு​களும் தங்​களது தேர்​களில் இருந்​த​படி பக்​தர்​களுக்கு தரிசனம் தருகின்றனர். ஜெகந்​நாதர் தாயின் சகோ​தரி (சித்​தி) இல்​ல​மாக கருதப்​படும் குண்​டிச்சா கோயிலுக்கு அவர்​கள் பயணம் செய்கின்​றனர்.

ஜெகந்​நாதர் கோயி​லில் தொடங்​கும் இந்த யாத்​திரை, சுமார் 3 கி.மீ. தொலைவை கடந்து ஸ்ரீ குண்​டிச்சா கோயி​லில் நிறைவடைகிறது. சுவாமிகள் குண்​டிச்சா கோயி​லில் ஒரு வாரம் தங்​கி​யிருந்து பிறகு ‘பஹுதா யாத்​திரை' எனப்​படும் விழாவின்போது, அதே தேர்​களில் மீண்​டும் ஸ்ரீ ஜெகந்​நாதர் கோவிலுக்​குத் திரும்​பு​வார்​கள். இந்​நிலை​யில் நிகழாண்​டுக்​கான ரத யாத்​திரை நேற்று மாலை கோலாகல​மாக தொடங்​கியது. பல்​லா​யிரக்​கணக்கான பக்​தர்​கள் தேரை வடம் பிடித்து இழுத்​தனர்.

முன்​ன​தாக ஜெகந்​நாதர், பாலபத்​திரர், சுபத்ரா தேவி ஆகிய மூர்த்தி​களை கோயில் கரு​வறை​யில் இருந்து தேர்​களுக்கு கொண்டு வரும் ‘பகண்​டி’ சடங்கு நேற்று காலை​யில் தொடங்கியது. இதில் கோயி​லின் சிம்ம நுழை​வா​யிலுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் தேர்​களுக்கு மூர்த்​தி​கள் கொண்டு வரப்பட்டனர்.

இதில் முதலில் சுபத்ரா தேவி​யும், இதையடுத்து பால பத்​திரரும், இறு​தி​யாக ஜெகந்​நாதரும் கோயி​லில் இருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்​வல​மாக கொண்டு வரப்​பட்டு தேர்களில் அமர்த்​தப்​பட்​டனர். தேர்​கள் நிறுத்​தப்​பட்​டிருந்த கிராண்ட் சாலை​யில் லட்​சக் ​கணக்​கான பக்​தர்​கள் திரண்​டிருந்து இந்த நிகழ்வை தரிசனம் செய்​தனர்.

பக்​தர்​கள் கைகளை உயர்த்தி ‘ஜெய் ஜெகந்​நாதர்' என்று முழக்கமிட்​ட​தால் கிராண்ட் ரோடு முழு​வதும் பக்​திப் பெருக்கு ஏற்பட்​டது. மேலும் இந்த நிகழ்​வில் ஒடிசி நடனக் கலைஞர்​கள், நாட்​டுப் ​புறக் கலைஞர்​கள் மற்​றும் கலாச்​சா​ரக் குழு​வினரின் கலை நிகழ்ச்​சிகள் இடம்​பெற்​றன. ரத யாத்​திரை சீராக நடைபெறு​வதை உறுதி செய்​வதற்​காக மாநில அரசு பல அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​களை செய்​துள்​ளது.

முன்​ன​தாக, முதல்​வர் மோகன் சரண் மாஜி, ரத யாத்​திரை ஆயத்தப் பணி​கள் மற்​றும் பாது​காப்பு ஏற்​பாடு​களை ஆய்வு செய்தார். 19 ஐபிஎஸ் அதி​காரி​கள் உட்பட சுமார் 13,000 போலீஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ள​தாக ஒடிசா டிஜிபி ஒய்​.பி.கு​ரானியா கூறி​னார். ஏஜ தொழில்​ நுட்​பம் கொண்ட 473 சிசிடிவி கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்டு 2 கட்டுப்பாட்டு மையங்​கள் மூலம் கிராண்ட் ரோடு மற்​றும் அதைச் சுற்​றி​யுள்​ள பகு​தி​களை கண்​காணித்​து வரு​வ​தாக அதி​காரிகள்​ தெரிவித்​தனர்​.

கூட்ட நெரிசலில் ஒருவர் உயிரிழப்பு: புரி ஜெகந்நாதர் கோயிலில் நேற்று ரத யாத்திரை தொடங்குவதற்கு முன் மூன்று மூர்த்திகளின் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட தேர்களுக்கு கொண்டு வரும் ‘பகண்டி’ சடங்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில் ரத யாத்திரை தொடங்கிய போது தேரை வடம் பிடித்து இழுப்பதற்காக பக்தர்கள் முண்டியடித்துச் சென்றதால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 120 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT