பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

 
ஆன்மிகம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

செய்திப்பிரிவு

திருப்பத்தூர்: பிரசித்திபெற்ற பிள்​ளை​யார்​பட்டி கற்பக விநாயகர் கோயி​லில் நேற்று நடை​பெற்ற தேரோட்​டத்​தில் திரளான பக்​தர்​கள் வடம் பிடித்து இழுத்​தனர்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அருகே பிள்​ளை​யார்​பட்​டி​யில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயி​லில் விநாயக சதுர்த்தி விழா செப்​.5-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. விழா நாட்​களில் தின​மும் காலை​யில் கேடகத்​தி​லும், மாலை​யில் சிம்​மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்​ளிட்ட வாக​னங்​களி​லும் விநாயகர் எழுந்​தருளி வீதி உலா வந்​தார்.

செப்​.10-ம் தேதி கஜமுக சூரசம்​ஹாரம் நடை​பெற்​றது. நேற்று தேரோட்​டம் நடை​பெற்​றது. இதை​யொட்​டி, நேற்று காலை பெரிய தேரில் விநாயகர், சிறிய தேரில் சண்​டீகேசுவரர் எழுந்​தருளினர். மாலை 4.50 மணிக்கு தேரோட்​டம் தொடங்​கியது. திரளான பக்​தர்​கள் தேரை வடம் பிடித்து இழுத்​தனர். சண்​டீகேசுவரர் தேரை பெண்​கள் மட்​டும் இழுத்​தனர்.

மேலும், ஆண்​டுக்கு ஒரு​முறை மட்​டுமே நடை​பெறும் சந்​தனக்​காப்பு அலங்​காரத்​தில் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூல​வர் கற்பக விநாயகர் பக்​தர்​களுக்கு காட்​சி​யளித்​தார்.

சதுர்த்​தியை முன்​னிட்டு இன்று அதி​காலை​யில் கோயில் நடை திறக்​கப்​பட்​டு, சிறப்பு பூஜைகள் நடை​பெறுகின்​றன. தொடர்ந்​து, கோயில் திருக்​குளத்​தில் அங்​குசத் தேவ​ருக்கு தீர்த்​த​வாரி நடை​பெறுகிறது. பிற்​பகல் 2 மணிக்கு மூல​வ​ருக்கு முக்​குறுணி மோதகம் படையலிடப்​படும். இரவு பஞ்​சமூர்த்தி சுவாமி புறப்​பாட்​டுடன் விழா நிறைவு பெறுகிறது.

SCROLL FOR NEXT