திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. மாடவீதிகளில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். |  படங்கள்: எல்.சீனிவாசன் |

 
ஆன்மிகம்

பார்த்தசாரதி கோயில் தேரோட்டம் கோலாகலம்: திருவல்லிக்கேணியில் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

செய்திப்பிரிவு

சென்னை: ​திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயில் பிரம்​மோற்சவ விழா​வின் முக்​கிய நிகழ்​வான தேரோட்டம் விமரிசை​யாக நடை​பெற்​றது. திரளான பக்​தர்​கள் கலந்​து​கொண்​டு, வடம் பிடித்து தேர் இழுத்​தனர்.

சென்னை திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயில் 108 வைணவ திவ்ய தேசங்​களில் ஒன்​றாகும். இக்​கோயி​லில் ஸ்ரீபார்த்​த​சா​ரதி பெரு​மாளுக்கு சித்​திரை மாதத்​தி​லும், நரசிம்மருக்கு ஆனிமாதத்​தி​லும் பிரம்மோற்​சவம் நடைபெறும்.

அந்த வகை​யில், இந்த ஆண்​டுக்​கான பார்த்​த​சா​ரதி பெரு​மாள் பிரம்​மோற்​சவம் கடந்த 1-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. இதை தொடர்ந்​து, காலை, மாலை வேளை​களில் புன்​னைமரம், சேஷ வாக​னம், சிம்ம வாக​னம் ஆகிய​வற்​றில் பெரு​மாள் வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

கடந்த 3-ம் தேதி கருட சேவை விமரிசை​யாக நடை​பெற்​றது. இதை தொடர்ந்​து, ஹம்ச வாக​னம், சூரிய பிரபை, சந்​திர பிரபை, பல்​லக்கு சேவை, அனு​மந்த வாக​னம், ஆனந்த விமானம், யானை வாக​னம் எனத் தொடர்ச்​சி​யாக உற்​சவங்​கள் நடை​பெற்​றன.

சர்வ அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளிய ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்.

இந்​நிலை​யில், விழா​வின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் நேற்று கோலாகல​மாக நடை​பெற்​றது. இதைக் காண நள்​ளிரவு முதலே சென்னை மற்​றும் சுற்​று​ வட்​டாரப் பகு​தி​களில் இருந்து ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் கோயில் வளாகத்​தில் குவிந்​தனர்.

நேற்று அதி​காலை 3.30 மணி முதல் 4.30 மணிக்​குள் பார்த்​த​சா​ரதி பெரு​மாள் சர்வ அலங்​காரத்​துடன் தேரில் எழுந்​தருளி​னார். காலை 7 மணிக்கு ‘கோ​விந்​தா, கோவிந்​தா’ முழக்​கத்​துடன் தேரோட்​டம் தொடங்​கியது.

மாட வீதி​களை வலம் வந்த தேர், காலை 9 மணி அளவில் நிலையை வந்​தடைந்​தது. இரவு 9 மணிக்கு தோட்​டத் திரு​மஞ்​சனம் நடை​பெற்​றது. இன்று காலை 6.15 மணிக்கு வெண்​ணெய்​தாழி உற்​சவ​மும், இரவு குதிரை வாகன சேவை​யும் நடை​பெற உள்​ளது.

நாளை காலை 11 மணிக்கு தீர்த்​த​வாரி உற்​சவம், இரவு கண்​ணாடி பல்லக்கு சேவை நடை​பெற உள்​ளது. 10-ம் தேதி சப்​தாவர்​ணம் எனும் சிறிய திருத்​தேர் நிகழ்​வுடன் பிரம்​மோற்சவ விழா நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT