மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, அதிகார நந்தி வாகனத்தில் வீதி உலா வந்த கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள்.| படம்: எஸ்.சத்தியசீலன் |

 
ஆன்மிகம்

மயிலை கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழாவில் அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி வீதி உலா

செய்திப்பிரிவு

சென்னை: மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் அதி​கார நந்தி வாக​னத்​தில் சுவாமி வீதி உலா விமரி​சை​யாக நடை​பெற்​றது. ஏராள​மான பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்​தனர்.

மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் இந்த ஆண்​டுக்​கான பங்​குனிப் பெரு​விழா கடந்த 23-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. நேற்று முன்​தினம் சூரிய வட்​டம், சந்​திர வட்​டம், கிளி, அன்ன வாக​னங்​களில் சுவாமி வீதி உலா நடை​பெற்​றது.

          

இந்​நிலை​யில், அதி​கார நந்தி சேவை நேற்று காலை 6 மணிக்கு நடை​பெற்​றது. அதி​கார நந்தி வாக​னத்​தில் கற்​ப​காம்​பிகை உடனுறை கபாலீஸ்​வரர் சர்வ அலங்​காரத்​தில் நான்கு மாட வீதி​களில் வீதி உலா வந்​தார்.

தொடர்ந்​து, கந்​தரு​வன், கந்​தரு​வி, மூஷிகம், வெள்​விடை வாக​னங்​களில் பரி​வார தேவதைகள் உலா வந்​தனர். தொடர்ந்​து, திரு​ஞானசம்​பந்​தர் திரு​முலைப்​பால் விழா நடை​பெற்​றது. இந்த நிகழ்​வில் ஏராள​மான பக்​தர்​கள் பங்​கேற்று சுவாமி தரிசனம் செய்​தனர்.

30-ல் அறு​பத்து மூவர் விழாபங்​குனிப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வு​களான தேரோட்​டம் 29-ம் தேதி​யும், அறு​பத்து மூவர் விழா 30-ம் தேதி​யும் நடை​பெற உள்​ளன.

இதில் ஏராள​மான பக்​தர்​கள் பங்​கேற்​பார்​கள் என்​ப​தால், அதற்​கேற்ப அடிப்​படை வசதி​களை செய்​யும் பணி​களில் கோயில் நிர்​வாகத்​தினர் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்​.

SCROLL FOR NEXT