சபரிமலை கோயில் பாதுகாப்புக்காக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட காவலர் குழு.

 
ஆன்மிகம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல, மகர விளக்கு வழிபாடு: ஆன்லைன் தரிசன முன்பதிவு ஜன. 10-ம் தேதி வரை நிறைவு

என்.கணேஷ்ராஜ்

குமுளி: சபரிமலை கோயி​லில் கடந்த 17-ம் தேதி முதல் மண்டல வழி​பாடு நடந்து வரு​கிறது. தொடக்க நாட்​களில் வரையறை​யின்றி பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​ட​தால் கடும் நெரிசல் ஏற்​பட்​டது. இதையடுத்​து, உடனடி தரிசன புக்​கிங் 20 ஆயிரத்​தில் இருந்து 5 ஆயிர​மாக குறைக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், கேரள டிஜிபி ரவுடா சந்​திரசேகர் நேற்று சந்​நி​தானத்​தில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்ள பாது​காப்பு ஏற்​பாடு​களை ஆய்வு செய்​தார். பின்​னர், 2-வது பிரிவு காவலர் குழு நேற்று கோயில் பாது​காப்​புக்​குப் பொறுப்​பேற்​றது. இதில் 1,543 பேர் உள்​ளனர்.

இந்​தக் குழு​வில் ஒரு உதவி சிறப்பு அதி​காரி (ஏஎஸ்​ஓ), 10 துணைக் கண்​காணிப்​பாளர்​கள், 34 ஆய்​வாளர்​கள் உள்​ளனர். சிறப்பு அதி​காரி எம்​.எல்​.சுனில், பக்​தர்​களை கையாள்​வது குறித்த இவர்​களுக்கு பயிற்சி அளித்​தார்.

இதையடுத்​து, பெரிய நடைப் பந்​தலில் 2-ம் பிரிவு போலீ​ஸார் உறு​தி​மொழி ஏற்று பொறுப்​பேற்​றுக் கொண்​டனர். இந்​நிலை​யில், சுவாமி தரிசனத்​துக்​கான ஆன்​லைன் முன்​ப​திவு​கள் ஜன. 10-ம் தேதி வரை நிறைவடைந்​துள்​ளன.

பக்​தர்​களின் கூட்​டத்​துக்கு ஏற்ப ஸ்பாட் புக்​கிங் மாற்றி அமைக்​கப்​படு​வதுடன், பல மணி நேரம் பதிவுக்​காக காத்​திருக்​கும் நிலை​யும் உள்​ளது. நேற்று வரை தரிசனம் செய்த பக்​தர்​களின் எண்​ணிக்கை 8 லட்​சத்​தைக் கடந்துள்ளது.

SCROLL FOR NEXT