குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் பக்தர்கள் வரிசையாக செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள். (உள்படம்) குரு பகவான்.

 
ஆன்மிகம்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் இன்று குருப்பெயர்ச்சி விழா கோலாகலம்

செய்திப்பிரிவு

திருவாரூர்: ஆலங்குடி ஆபத்​ச​காயேஸ்​வரர் கோயி​லில் குருப் பெயர்ச்சி விழா இன்​று (மே 26) முற்​பகல் 11 மணிக்கு நடை​பெற உள்​ளது. இதற்​கான முன்​னேற்​பாடு​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​கின்​றன.

திரு​வாரூர் மாவட்​டம் வலங்​கை​மான் வட்​டம் ஆலங்​குடி​யில் ஆபத்​ச​காயேஸ்​வரர் கோயில் உள்​ளது. இக்​கோயி​லில், குரு பகவான் தனி சந்​நி​தி​யில் எழுந்​தருளி, அருள்​பாலித்து வரு​கிறார்.

ஒவ்வொரு ஆண்​டும் குரு பகவான் ஒரு ராசி​யில் இருந்து மற்​றொரு ராசிக்கு பெயர்ச்சி அடை​யும்​போது, குரு பகவான் சந்​நி​தி​யில் பெயர்ச்சி விழா நடை​பெறு​வது வழக்​கம். அதன்​படி, இன்று (மே 26) குரு பகவான் மிதுன ராசி​யில் இருந்து கடக ராசிக்கு முற்​பகல் 11 மணிக்கு பெயர்ச்​சி யாகிறார்.

இதையொட்​டி, சந்நி​தி​யில் குருப் பெயர்ச்சி நடைபெறும் நேரத்​தில் குரு பகவானுக்கு மகா தீபா​ராதனை காட்​டப்படும். இதில், திரளான பக்​தர்​கள் பங்​கேற்க உள்​ளனர்.

குருப் பெயர்ச்​சி​யையொட்​டி மேஷம், ரிஷபம், கடகம், சிம்​மம், துலாம், தனுசு, கும்​பம் ஆகிய ராசிக்​காரர்​கள் பரி​காரம் செய்​து​ கொள்ள வேண்​டும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தால், பரி​கார பூஜைகளும் நடை​பெறும்.

கூட்ட நெரிசலை தவிர்க்​கும் வகை​யில், பக்​தர்​கள் வரிசை​யாகச் சென்று சுவாமி தரிசனம் செய்​வதற்கு உரிய தடுப்​பு​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. கண்​காணிப்பு கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டு, பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

கழிப்​பறை, குடிநீர் உள்​ளிட்ட வசதி​களும் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. மன்​னார்​குடி, கும்​பகோணம், தஞ்​சாவூர் உள்​ளிட்ட இடங்களில் இருந்து ஆலங்​குடிக்கு சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

SCROLL FOR NEXT