ஆன்மிகம்

திருப்பதி கோயிலில் குவியும் பக்தர்கள்: டிக்கெட் இல்லாமல் சர்வ தரிசனம் ஏற்பாடு

என். மகேஷ்குமார்

திருமலை: சொர்க்க வாசல் தரிசனத்​திற்​காக டிக்​கெட் இல்​லாமல் வரும் பக்​தர்​களுக்கு நேற்று முதல் வரும் 8-ம் தேதி வரை திருப்​பதி தேவஸ்​தானம் அனு​மதி வழங்கி உள்​ளதை தொடர்ந்​து, திரு​மலைக்கு பக்​தர்​கள் குவிந்த வண்​ணம் உள்​ளனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் கடந்த டிசம்​பர் மாதம் 30-ம் தேதி சொர்க்க வாசல் திறக்​கப்​பட்​டது. ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்​களுக்கு சொர்க்க வாசல் தரிசனத்​திற்கு பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​படு​வார்​கள் என தேவஸ்​தானம் தெரி​வித்து இருந்​தது.

ஆனால், முதல் 3 நாட்​கள், அதாவது டிசம்​பர் 30, 31 மற்​றும் ஜனவரி 1-ம் தேதி ஆகிய 3 நாட்​களும் ஏற்​கெனவே ஆன்​லைன் மூலம் குலுக்​கல் முறை​யில் தரிசன டிக்​கெட்​டு​கள் வழங்​கப்​பட்டு விட்​டன. ஆதலால், மற்​றவர்​களுக்கு அனு​மதி இல்லை என தேவஸ்​தானம் அறி​வித்​தது.

இந்​நிலை​யில், நேற்று 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை டிக்​கெட்​டு​கள் இல்​லா​விட்​டாலும் சுவாமியை பக்​தர்​கள் தர்ம தரிசனம் வாயி​லாக தரிசிக்​கலாம் என தேவஸ்​தானம் அறி​வித்​ததை தொடர்ந்​து, 1-ம் தேதி மாலை முதலே திரளான பக்​தர்​கள் திருப்​ப​திக்கு குவிய தொடங்​கினர்.

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை முதல் எவ்​வித தரிசன டிக்​கெட்​டு​கள் இல்​லா​விட்​டாலும் பக்​தர்​கள் நேரடி​யாக திரு​மலைக்கு சென்​று, தர்ம தரிசன வரிசை​யில் சென்று ஏழு​மலை​யானை தரிசித்து வரு​கின்​றனர்.

இவ்​வாறு தரிசிக்க செல்​லும் பக்​தர்​களுக்கு வரிசை​யில் உணவு, குடிநீர், சிறு​வர்​களுக்கு பால் என திருப்​பதி தேவஸ்​தானம் அனைத்து ஏற்​பாடு​களை​யும் செய்​துள்​ளது. மேலும் 24 மணி நேர​மும் அன்​னபிர​சாதம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. தின​மும் சுமார் 8 லட்​சம் லட்டு பிர​சாதங்​கள் தயார் நிலை​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்து தேவஸ்​தான கூடு​தல் நிர்​வாக அதி​காரி வெங்​கைய்ய சவுத்ரி செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “திரு​மலைக்கு வரும் பக்​தர்​கள் கூட்​டம் அதி​க​மாக இருந்​தால் பிஏசி சத்​திரத்​தில் அவர்​கள் காத்​திருக்​கலாம். கூட்​டம் குறைந்​ததும் தரிசனத்​திற்கு செல்​லும் நேரத்தை அங்கு வந்து தேவஸ்​தான அதி​காரி​கள் அறி​விப்​பார்​கள்’’ என்றார்.

SCROLL FOR NEXT