திருமலை: கடந்த மே மாதம் கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலை மோதியது.
தினமும் சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். இதனால் லட்டு பிரசாதத்தின் விற்பனையும் அதிகமானது. கடந்த மே மாதத்தில் மட்டும் 1 கோடியே 21 லட்சத்து 35,528 லட்டு பிரசாதம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இதுவே கடந்த 2024 மே மாதத்தில் 1.01 கோடியும், 2025 மே மாதத்தில் 1.10 கோடியும் விற்பனையானது.
பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதம் தயாரிக்க ‘திட்டம்’ எனும் அளவை கடந்த 1950-51 முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடைபிடித்து வருகிறது. ஒரு லட்டுக்கு 167 முதல் 170 கிராம் எடை கொண்ட மூலப்பொருட்கள் அவசியமாகிறது. ஒரு லட்டுக்கு 78 கிராம் சர்க்கரை, 39 கிராம் கடலை மாவு, 36 கிராம் நெய், 7 கிராம் முந்திரி, 3 கிராம் உலர் திராட்சை, ஏலக்காய் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.
இது போன்று தினமும் 68 டன் மூலப்பொருட்கள் லட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் சர்க்கரை 32 டன், நெய் 16 டன், முந்திரி 3.5 டன், உலர் திராட்சை 2 டன், ஏலக்காய் 400 கிலோ மற்றும் கற்கண்டு 800 கிலோ பயன்படுத்தப்படுகிறது.