சென்னை திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில் பிரமோற்சவ விழாவின் ஒரு பகுதியாக சேனைமுதன்மையார் புறப்பாடு நேற்று நடைபெற்றது. | படம்: எஸ்.சத்தியசீலன் |

 
ஆன்மிகம்

சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சேனைமுதன்மையார் புறப்பாடு

செய்திப்பிரிவு

சென்னை: ​திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி கோயி​லில் சித்திரை பிரம்​மோற்​சவத்தை முன்​னிட்டு நேற்று சேனை​முதன்​மை​யார் புறப்​பாடு நடந்​தது.

சென்னை, திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி பெருமாள் கோயி​லில், ஆண்​டு​தோறும் சித்​திரை மாத பிரம்​மோற்சவ விழா கொண்​டாடப்​படு​வது வழக்​கம்.

அந்த வகை​யில், இந்த ஆண்​டுக்​கான பிரம்​மோற் சவ விழா இன்​று (1-ம் தேதி) கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. இவ்விழாவுக்கு முன்​னோட்​ட​மாக, நேற்றுமுன்​தினம் இரவு புஷ்பப் பல்​லக்கு சேவை நடை​பெற்​றது. பல்​லக்​கில் பெரு​மாள் எழுந்​தருளி வீதி உலா வந்​த​போது, திரளான பக்​தர்​கள் தரிசித்​தனர்.

அதனைத் தொடர்ந்​து, நேற்று விழாவுக்​கான அங்​கு​ரார்ப்​பணம் எனும் முளை​யிடு​தல் நிகழ்வு நடை​பெற்​றது. தொடர்ந்​து, பிரம்​மோற்சவ விழா எவ்​வித இடையூறுமின்றி செம்​மை​யாக நடை​பெற வேண்​டி, சேனா​தி​காரி​யான விஷ்வக்​சேனர் நேற்று மாட வீதி​களில் உலா வந்து முன்​னேற்​பாடு​களைப் பார்​வை​யிட்​டார்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை கொடியேற்ற நிகழ்​வுடன் விழா முறைப்​படி தொடங்​கு​கிறது. இன்​றி​லிருந்து 10 நாட்​களுக்​கு, தின​மும் காலை, இரவு வேளை​களில் வெவ்​வேறு வாக​னங்​களில் சுவாமி வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலிக்க உள்​ளார்.

பிரம்​மோற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் 7-ம் தேதியும், 8-ம் தேதி பல்​லக்​கில் வெண்​ணெய் தாழி கண்​ணன் திருக்​கோலத்​தில் சுவாமி புறப்​பாடும், 9-ம் தேதி இரவு கொடி​யிறக்க நிகழ்வும் நடை​பெறும். 10-ம் தேதி இரவு 10 மணிக்கு சிறிய திருத்​தேர் நிகழ்​வுடன் விழா நிறைவடைகிறது.

SCROLL FOR NEXT