ஆன்மிகம்

வார ராசிபலன் 12/10/2017 முதல் 18/10/2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

பெருங்குளம் ராமகிருஷ்ணன்

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியிலிருக்கும் தேவகுருவால் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். ராசியாதிபதி சுக்கிரன் ராசிக்கு மறைந்திருந்தாலும் சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கும். வியாபாரத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றிப் பாராட்டுகளைப் பெறுவார்கள்.

குடும்பத்தில் வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்குக் காரியத் தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்குப் பணவரத்து அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் பணிகளுக்குத்  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள். மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்கள் உதவி கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 5, 6

பரிகாரம்: தினமும் ஆண்டாளை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் லாபஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்கள் வாழ்க்கைத்தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். முன்பின் யோசிக்காமல் எதையும் பேசவேண்டாம். தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது மிகவும் நிதானமாக இருக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், செலவினத்தைச் சந்திப்பார்கள்.

மற்றவருக்காக வீண்பழி ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். உறவினர்களிடம் பேசும் போதும் அவர்களின் கேள்விகளுக்கு  பதில் சொல்லும் போதும் நிதானமாக இருக்கவும். பெண்களின் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு வழக்கத்தை விட செலவு கூடும். அரசியல்வாதிகள் வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை.  மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறக் கூடுதல் கவனம் செலுத்திப் படிக்கவும். வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 9

பரிகாரம்: தினமும் அம்மனை வழிபட உத்தியோகத்தில் மேன்மை கிடைக்கும். மனதில் இருந்த குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு சஞ்சாரத்தால் எடுத்த முயற்சிகள் கைகூடும். வரவுக்கேற்ற செலவு ஏற்படும். எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோதைரியம் கூடும். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் சஞ்சாரத்தால் ஊழியர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். வேலை தேடி அலைந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள், மேலதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும்.

குடும்பத்தில் விருந்தினர் வருகை, குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவால் செலவு அதிகரிக்கும். பெண்களுக்கு வலிய சென்று உதவுவதன் மூலம் வீண்பழி ஏற்படலாம். கலைத்துறையினரின் வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். அரசியல்வாதிகள் மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். மாணவர்களுக்கு எந்த வேலை செய்தாலும் கவனமாக செய்வது நல்லது. பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: மஞ்சள், வெள்ளை | எண்கள்: 3, 6, 9

பரிகாரம்: தினமும் சிவனை வழிபட தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் தனஸ்தானத்தை குரு பார்ப்பதன் மூலம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணமும் அலைச்சலும் உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குக் கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். குடும்பச் செலவுகள் கூடும்.

குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். கலைத்துறையினர் நேரம் தவறி உண்பதைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றப் போராட வேண்டும். மாணவர்கள் கவனம் சிதற விடாமல் பாடங்களைப் படிப்பது நல்லது. விளையாட்டுகளின் போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளை

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: நீலம் | எண்கள்: 3, 6

பரிகாரம்: தினமும் காவல் தெய்வத்தை வழிபட நன்மையான பலன்கள் உங்களைத் தேடி வரும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியைப் பார்க்கும் தனகாரகன் குருவால் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். தொழில் விரிவாக்கத்துக்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலைச்சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களுக்குப் புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். கலைத்துறையினருக்குக் கலைக்காரகன் சுக்கிரன் புதிய தொடர்புகளை ஏற்படுத்தி தருவார். அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: மேற்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை | எண்கள்: 1, 5

பரிகாரம்: தினமும் அருகம்புல் படைத்து விநாயகரை வழிபடத் தடைகள் அனைத்தும் விலகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு மறைந்திருந்தாலும் அவரின் பார்வையால் பல வழியிலும் பணவரத்து  இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். தொழில், வியாபாரத்தால் லாபம் அதிகம் வரும். வாக்குவன்மையால் தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் புதிய பதவி கிடைக்கும்.

அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாகக் கிடைக்கும். பெண்கள் எடுத்த வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்குப் பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும்.  மாணவர்களுக்குப் படிப்பில் முன்னேற்றம் காணப்படும்.  கல்வியில் வெற்றி பெறத் தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, மேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: தினமும் ஆஞ்சநேயரை வழிபட மனதில் இருக்கும் சஞ்சலம் நீங்கும்.

SCROLL FOR NEXT