ஆன்மிகம்

சர்வ பாவமும் போக்கும் சனிப்பிரதோஷ தரிசனம்; வீட்டிலிருந்தே தரிசிக்க திருவொற்றியூர் கோயில் ஏற்பாடு! 

வி. ராம்ஜி

சனிப் பிரதோஷம் சர்வ பாவ விமோசனம் என்பார்கள். சகல பாவங்களும் போக்கி புண்ணியத்தைத் தந்தருளும் சனிப்பிரதோஷ தரிசனத்தை, வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் நேரலையில் தரிசிக்கலாம். சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் பிரதோஷ தரிசனத்தை நாளைய தினம் 12ம் தேதி நேரலையில் கண்டு பயன்பெறுங்கள்.

பிரதோஷம் எந்த நாளில் வந்தாலும் விசேஷம்தான். குறிப்பாக சனிக்கிழமை அன்று வருகிற பிரதோஷம், இன்னும் சிறப்பானது, வலிமை மிக்கது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். அதனால்தான் சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நாளைய தினம் 12ம் தேதி சனிக்கிழமை பிரதோஷம். சனிப்பிரதோஷம்.

சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை ஆன்லைன்' மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது ஆலய நிர்வாகம்.

பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், 12.12.2020 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசிக்கலாம். வீட்டிலிருந்தபடியே தரிசிக்கலாம். சென்னை திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமியின் பேரருளைப் பெறலாம்.

மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும், இந்த தகவலினை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவரும் பிரதோஷ வழிபாட்டினை நேரலையில் கண்டு இறைவன் அருள் பெறுங்கள் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT