என்னென்ன தேவை?
முழு கோதுமை - 200 கிராம்
பச்சரிசி - 150 கிராம்
கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா 100 கிராம்
காய்ந்த மிளகாய்- 10 முதல் 12
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
துருவிய கேரட், முட்டை கோஸ் - அரை கப்
தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
முழு கோதுமையை 10 மணி நேரம் ஊறவைக்கவும். பச்சரிசி, பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய் இவற்றை 1 மணி நேரம் ஊறவைக்கவும். இவற்றை ஊறிய கோதுமையுடன் சேர்த்து ரவை ரவையாக அரைக்கவும். அரைத்த மாவுடன் உப்பு, பெருங்காயம், சீரகம், துருவிய கேரட், முட்டைகோஸ் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை அடையாக வார்த்து, சுற்றிலும் தேங்காய் எண்ணெய் விடவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். வெண்ணெய், வெல்லம் ஆகியவற்றையும் தொட்டுக் கொள்ளலாம்.
குறிப்பு-லட்சுமி சீனிவாசன்