வாரிசு திரைப்படம் 
ஓடிடி களம்

பிப்ரவரி 22-ல் ஓடிடியில் வெளியாகிறது விஜய்யின் ‘வாரிசு’

செய்திப்பிரிவு

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் பிப்ரவரி 22-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் நாள் இப்படம் ரூ.19.43 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. உலக அளவில் 7 நாட்களில் ரூ.210 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. விமர்சன ரீதியில் வரவேற்பு இல்லை என்றாலும், வசூலில் நல்ல வருவாயை படம் ஈட்டியது. அதன்படி உலக அளவில் படம் ரூ.300 கோடியை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் படம் வரும் பிப்ரவரி 22-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..

SCROLL FOR NEXT