ஜூலை 11 அன்று வெளிவந்த ‘நிறைவேறாத இலக்கும் இடைவிடாத பயணமும்’ என்ற தலையங்கம் படித்தேன். ஐ.நா-வின் அறிக்கை ஒரு பக்கம் அபாய மணி அடித்தாலும் இந்திய நாட்டின் ஆரம்பக் கல்வி நிலை பல்வேறு நடைமுறைச் சிக்கல்களைச் சந்திப்பதால், இலக்கை எட்டுவது சிரமமாக உள்ளது. மாணவர் சேர்க்கையில் கவனம் செலுத்தும் அரசுகள் தரத்தில் கவனம் செலுத்துவதில்லை. ஆசிரியர்களை நிரப்பும்
அரசுப் பள்ளி, கல்வித் தரத்தை முழுவதுமாக நிரப்புவதில்லை. இவ்வாறு நிலைகள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கும்போது, இலக்கு நிறைவேற இடைவிடாத கூட்டு முயற்சிகள் அவசியம்.
- வெ. சிவ ஆனந்த கிருஷ்ணன், களக்காடு.