‘ஜெ. மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை வாங்க முயற்சிப்பேன்’ என்று சொல்லும் ஆச்சார்யாவின் முன் வரலாறு என்ன? வாய்ப்பே இல்லாதவற்றையெல்லாம் வாய்ச்சவடால் விடுவதில் வல்லவர்.
உயர் நீதிமன்ற மேல்முறையீடே செல்லாது என வாதிட்டுத் தோற்றவர். இப்போது, உச்ச நீதிமன்றத்தில் விடுதலைக்குத் தடை பெறுவேன் எனத் தவறாகத் திசை திருப்புபவர். அன்றைய திமுக அரசாங்கம் கூறிய குற்றச்சாட்டுகளை எல்லாம் அப்படியே வழிமொழிந்தவர்.
இவ்வழக்கைத் தொடுத்ததில் துளியும் அரசியல் உள்நோக்கம் இல்லை எனச் சித்தரிக்க முயல்பவர். அட்வகேட் ஜெனரல் பதவி, ஸ்பெஷல் பப்ளிக் பிராசிக்யூட்டர் பதவி என இரட்டைக் குதிரைச் சவாரி செய்து பதவிகளை அனுபவித்தவர். இரண்டில் எது எனக் கேட்டபோது, ஸ்பெஷல் பப்ளிக் பிராசிக்யூட்டர் என இறங்கி வந்தவர். பரபரப்புக்குப் பெயர் பெற்ற அரசியல்வாதிகளைப் போல், இவரும் பரபரப்புக்குப் பெயர் பெற்ற பப்ளிக் பிராசிக்யூட்டர்!
- என். ரமணி,இணையதளம் வழியாக…