ஆழ்துளைக்கிணற்றில் குழந்தைகள் தவறி விழுவதும், பேரிடர் மேலாண்மைக் குழுவினரால் உயிரோடு அல்லது உயிரற்ற நிலையில் மீட்கப்படுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டேதான் உள்ளது.
ஓரிரு நாட்கள் அதைப் பற்றிப் பேசுவதோடும், உரிமையாளர்கள் கைது செய்யப்படுவதோடும் அந்த நிகழ்வுகள் முடிகின்றன.
திறந்திருக்கும் ஆழ்துளைக் கிணறுகளைக் கண்டறிந்து அதை மூடச்செய்வதும், விபத்து நடக்கும் முன்னரே காப்பதும் ஓர் அரசின் கடமையாகும்.
- சு. தட்சிணாமூர்த்தி,கோவை.