பூமியைக் காப்பாற்ற மரக்கன்றுகள் நடுவதே தீர்வு எனும் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழக புவி அறிவியல் ஆய்வுமையப் பேராசிரியர் குருஞானத்தின் கூற்று வரவேற்கத்தக்கது.
நாம் அனுபவித்த இந்த பூமியின் இயற்கை வளங்களை நம் சந்ததியினருக்கும் விட்டுச்செல்வது நமது பொறுப்பு.
சுத்தமான பூமி, பசுமையான பூமி என்பதை நோக்கமாகக் கொண்டு கொண்டாடப்படும் உலக பூமி தினம், இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கை உண்டாகிறது.
- சு.தட்சிணாமூர்த்தி,கோவை.