பேராசிரியர் தங்க. ஜெயராமனின் ‘மண்ணைப் பொன்னாக்கிய பண்ணையாட்கள்’ பெருங்கட்டுரைப் படித்தபோது மெய்சிலிர்த்துப்போனது.
விவசாய குடும்பத்தில் பிறந்து பணி நிமித்தமாக விவசாயத்தை விட்டுவிட்ட எங்களைப் போன்ற நடுத்தர வயது உடையவர்களுக்கு கட்டுரையின் ஒவ்வொரு வரியும் பழைய நாட்களை நினைவுபடுத்தியது.
கட்டுரையில் பட்டியலிடப்பட்ட காட்சிகளும் கட்டுரையாசிரியரின் மொழிநடையும் அற்புதம்.
- ந. குமார்,திருவாரூர்.