‘ஒரு காந்தியின் வருகையும் ஒரு காந்தியின் புறப்பாடும்’ கட்டுரை சமீபத்தில் வெளியான மிக முக்கியமான கட்டுரை.
அடித்தட்டு மக்களை காங்கிரஸ் இயக்கத்தை நோக்கி இழுத்த காந்தியின் மனதில் உயர்ந்த லட்சியம் இருந்தது. தற்போது லட்சியம் என்ற வார்த்தை மதிப்பிழந்துவிட்டது.
பெரும் பணக்காரர்களின் இருப்பிடமாக இருந்த காங்கிரஸ், தற்போது மத்திய அரசு கொண்டுவரும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்ப்பதன் மூலம், விவசாயிகளின் பக்கம் திரும்பியிருக்கிறது.
ஆனால், இந்த மாற்றத்துக்கு அடிப்படையாக, காந்தியின் உண்மையான கொள்கைகள் இருந்தால்தான் அதற்கு மதிப்பு இருக்கும்.
- இரா.மீ. தீத்தாரப்பன்,இராஜபாளையம்.