இப்படிக்கு இவர்கள்

சக மனிதர்களாக நடத்துங்கள்

செய்திப்பிரிவு

ஜெனிஃபர் பின்னே பொய்லான் எழுதிய ‘வாழ்வதற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’ எனும் கட்டுரை மூன்றாம் பாலினரின் உள்ளக் குமுறல்களைப் பிரதிபலித்தது.

சமூகத்தில் எதிர்கொள்ளும் அவமதிப்புகள் காரணமாக அவர் களுக்கு ஏற்படும் மனஇறுக்கம், மனத் துன்பம் அளவிட முடியாதது. கருவுற்ற காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் குளறுபடிகள் மூளை அணுக்களின் சில பகுதிகளில் உண்டாகும் குளறுபடிகள் காரணமாக இந்த நிலை ஏற்படலாம்.

மூன்றாம் பாலினத்தவர்களைச் சக மனிதர்களாக நடத்தினாலே, பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும்.

- டாக்டர் ஜி. ராஜமோகன்,உளவியல் பேராசிரியர்,

சென்னை.

SCROLL FOR NEXT