எல்லையில் பாகிஸ்தான் படைகளின் தாக்குதலால் காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேறினார்கள் எனும் செய்தி அன்றாட நிகழ்வாகிவிட்டது. ஆட்சி மாறினாலும் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிலையில் மாற்றம் வரவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சுமுக நிலையை அடையும் வரை இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படாது என்றே தோன்றுகிறது.
- கி. நாவுக்கரசன்,ராணிப்பேட்டை.