‘நீர்… நிலம்… வனம்' தொடரில் இரண்டு கடற்புற கதாநாயகர்களின் கதை படித்து வியந்துபோனேன்.
பொதுவாகவே, மீனவர்கள் அவர்கள் தொழிலின் காரணமாக சற்று முரட்டு சுபாவம் வாய்ந்தவர்கள். உறுதியான உடற்கட்டும், எதற்கும் அஞ்சாத உள வளமும் வாய்க்கப்பெற்றவர்கள். முத்துமுனியன், இயேசுபுத்திரன் இருவருமே இருவேறு கடற்புற மீனவர்களின் பிரதிநிதிகள். மீனவர்களின் வாழ்வு எவ்வளவு துயரம் நிறைந்தது என்பதற்கு இவர்கள் இருவரின் வாழ்வும் சாட்சி.
- கே.எஸ். முகமத் ஷூஐப்,காயல்பட்டினம்.