தீவிரவாதத்தின் ஆணிவேர் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும்தான் என்பது அனைவரும் அறிந்ததே.
வறுமையில் வாடுபவர்கள், வேலையில்லாமல் இருப்பவர்கள்தான் எளிதில் தீவிரவாதத்தின் பக்கம் சாய்ந்துவிடுவார்கள்.
உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் இருக்கும்பட்சத்தில், இத்தகைய கொடிய பாதையைத் தேர்ந்தெடுக்க மக்கள் தயங்கவே செய்வார்கள்.
அதனால், தீவிரவாதிகளை ஒடுக்கும் அதே நேரத்தில், தீவிரவாதிகள் உருவாவதைத் தடுப்பதும் அவசியம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியும், வெறும் ஆயுதங்களால் மட்டும் அல்ல.
- ஜே. லூர்து,மதுரை.