‘கொலைக்களத்தில் பத்திரிகையாளர்கள்’ கட்டுரை வாசித்தேன். உண்மை நிலவரங்களை நேரில் கண்டறிந்து உலகுக்குச் சொல்வதில் முதல் ஆளாக இருந்திட வேண்டுமென்ற உத்வேகத்துடன் கலவர பூமிகளிலும் போர்க் களங்களிலும் உயிரைப் பணயம் வைத்துச் செயல்படத் துணியும் சுயேச்சை இதழாளர்கள் அனுபவிக்க நேரும் கொடுமைகளும் துயரங்களும் சொல்லி மாளாது. எதிரியை எச்சரிப்பதற்காகப் பத்திரிகையாளர்களைப் பலிகடா வாக்கிடும் போக்கு தொடர்வது கண்டனத்துக்கு உரியதே.
- ஜத்துஜஸ்ரா, கொடைக்கானல்.