சிறப்புக் கட்டுரைகள்

ஓர் சகாப்தத்தின் பயணம்

செய்திப்பிரிவு

போராட்டமே வாழ்க்கை

எதிலும் துணைநின்ற குடும்பம்

பெரியாரின் பட்டறையில் உருவெடுத்த சூரியன்

அண்ணா காட்டிய வழி

உற்ற தோழன், கண்ணியமான எதிரி!

சமூக நலத் திட்டங்களின் முன்னோடி

இந்தியாவுக்கே வழிகாட்டுகிற பல நல்ல சமூக நலத் திட்டங்களை உருவாக்கியவர் கருணாநிதி. சத்துணவுடன் முட்டை, பள்ளி செல்ல கட்டணமற்ற பஸ் பாஸ், விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின்சாரம், விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 34 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள், குடிசையிலும் நடைபாதைகளிலும் வாழ்ந்த மக்களுக்காக குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், கண்ணொளி திட்டம், பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளிகள் மறுவாழ்வு என்று பல சமூக நலத்திட்டங்களைக் கொண்டுவந்தவர் அவர்.

தொலைக்காட்சி வழங்கும் திட்டத்தை அவர் அறிவித்தபோது கடும் விமர்சனங்கள் எழுந்தன. “ஏழைகள் தொலைக்காட்சி பார்க்க இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?” என்று எதிர்க்கேள்வி கேட்டவர் வெற்றிகரமாக அத்திட்டத்தையும் நிறைவேற்றினார். ‘ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி’ எனும் வாக்குறுதியோடு 1967-ல் தேர்தலைச் சந்தித்த திமுக, கருணாநிதியின் 2006 ஆட்சிக்காலத்தில் ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற மகத்தான திட்டத்தைச் செயல்படுத்தியது.

பிற்பாடு அது விலையே இல்லாமல் குடும்பத்துக்கு 20 கிலோ அரிசி வழங்கும் திட்டமாக அதிமுக ஆட்சியில் வளர்ந்தது. இந்தியாவிலேயே முதலாவதாக கை ரிக்ஷாக்களை ஒழித்ததுடன், அவர்களுக்கு சைக்கிள் ரிக்ஷாவும் வழங்கினார். பெண்கள் உயர்வுக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் வகையில் படிப்பு முதல் மகப்பேறு வரையில் பல்வேறு உதவித் திட்டங்களைக் கொண்டுவந்தார். பெண்களுக்குச் சொத்தில் சமவுரிமை கொண்டுவந்தது அவருடைய முக்கியமான சாதனைகளில் ஒன்று!

மாநில உரிமைக்கான போர்க்குரல்

அரசியல் முரணியக்கம்

நெருக்கடி நிலை யுகத்தின் நாயகன் 

தன்னுடைய அரசியல் வாழ்வில், அவருடைய அரசியல் போட்டியாளர்களுடன் ஒப்பிட பெருமளவில் ஜனநாயகவாதியாக இருந்தார் கருணாநிதி. பத்திரிகைகளால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் அவர். பதிலுக்கு அவரும் பேனாவைப் பிடித்தார். மத்திய அரசு கொண்டுவந்த கருப்புச் சட்டங்களுக்கு எதிராக இருந்தார். இந்திய வரலாற்றில் அழியா கரும்புள்ளியான நெருக்கடி நிலைக் காலகட்டத்தில் மத்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

1975 ஜூன் 25-ல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட அடுத்த நாள் அதிகாலையிலேயே ‘இந்திரா காந்தி சர்வாதிகாரத்துக்கான தொடக்க விழாவை நடத்தியிருக்கிறார்’ என்று கண்டன அறிக்கை எழுதினார் கருணாநிதி. எதிர்க்கட்சியினருக்குப் புகலிடம் தந்தார். இந்திராவை எதிர்த்ததால் அவர் ஆட்சி கலைக்கப்பட்டது. மகன் ஸ்டாலின் உள்பட திமுகவின் முன்னணி தலைவர்கள், தொண்டர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ‘முரசொலி’ வழியே ஜனநாயகத்துக்காகப் பெரும் தாக்குதல் நடத்தினார் கருணாநிதி. கட்சியையும் கட்டிக் காத்தார்.

கூட்டணி ஆட்சியின் தளகர்த்தர்

எழுத்தில் வாழ்பவர்

கை விலங்குகளை மாலைகளாக மாற்றியவர்

SCROLL FOR NEXT