இலக்கியம்

மா.அரங்கநாதன் இலக்கிய விருதுக்கு விட்டல்ராவ், அம்ஷன் குமார் தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: ​மா.அரங்​க​நாதன் இலக்​கிய விருதுகளுக்கு விட்​டல்​ராவ் மற்​றும் அம்​ஷன் குமார் ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

உச்ச நீதி​மன்ற நீதிபதி ஆர்​. ம​காதேவனின் தந்தை மறைந்த மா.அரங்​க​நாதன், சிறுகதை, கவிதை, கலாச்​சா​ரம், கலைகள் என ஏராள​மான புத்​தகங்​களை எழு​தி​யுள்ள தனித்​துவ படைப்​பாளி.

மா.அரங்​க​நாதனின் நினை​வைப் போற்​றும் வகை​யில் கடந்த 2018 முதல் ஆண்​டு​தோறும் ஏப்​.16 அன்று முன்​றில் இலக்​கிய அமைப்பு சார்​பில் கதை, கவிதை, நாவல், கவின்​கலை, ஆராய்ச்சி நூல்​கள், மொழிபெயர்ப்பு என தமிழுக்​கும், இலக்​கி​யத்​துக்​கும் சிறப்​பான பங்​களிப்பை ஆற்​றிவரும் இரு​வருக்கு மா.அரங்​க​நாதன் இலக்​கிய விருது வழங்கி கவுரவிக்​கப்​படு​கிறது.

          

விருதுடன் தலா ரூ.1 லட்​சம் ரொக்​கப் பரிசும் வழங்​கப்​படு​கிறது. அந்த வகை​யில் இந்​தாண்​டுக்​கான மா.அரங்​க​நாதன் இலக்​கிய விருது எழுத்​தாளர், ஓவியர், புகைப்​படக் கலைஞர் மற்​றும் தொழிற்​சங்​க​வா​தி​யான கி.​விட்​டல்​ராவ் மற்​றும் ஆவணப்பட தேசிய விரு​தாள​ரும், இயக்​குநரும், எழுத்​தாள​ரு​மான அம்​ஷன் குமார் ஆகியோருக்கு வழங்​கப்​பட​வுள்​ளது.

சென்னை அண்​ணா​சாலை ராணி சீதை அரங்​கில் ஏப்​.16 அன்று நடை​பெறும் விழா​வில் இவர்​களுக்​கான விருதை உச்ச நீதி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன்​ வழங்​கி கவுரவிக்க உள்ளார்​.

SCROLL FOR NEXT