இலக்கியம்

சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற ‘லிட் ஃபார் லைஃப்’ - ‘தி இந்து’ இலக்கியத் திருவிழா நிறைவு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் 2 நாட்​கள் நடை​பெற்ற ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்​கி​யத் திரு​விழா நேற்று நிறைவடைந்​தது.

‘தி இந்​து’ குழு​மம் சார்​பில் ‘லிட் ஃபார் லைஃப்’ இலக்​கி​யத் திரு​விழா ஆண்​டு​தோறும் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில், 14-வது ஆண்டு இலக்​கி​யத் திரு​விழா சென்னை சேத்​துப்​பட்டு லேடி ஆண்​டாள் பள்ளி வளாகத்​தில் 17-ம் தேதி தொடங்​கியது. நாடு முழு​வ​தி​லும் இருந்து ஏராள​மான இலக்​கிய ஆர்​வலர்​கள், இளைஞர்​கள், பொது​மக்​கள் இதில் பங்​கேற்​றனர்.

பல்​வேறு தலைப்​பு​களில் எழுத்​தாளர்​கள், ஆளு​மை​கள் கலந்​துரை​யாடினர். சிறப்​புரைகளும் நிகழ்த்​தினர். இந்​நிலை​யில், நிறைவு நாள் நிகழ்​வு​கள் நேற்று நடை​பெற்​றன. இதில், ‘வாழ்க்​கை​யின் அனுபவங்​களில் இருந்து கதைகளை உரு​வாக்​கு​வது’ குறித்த அமர்​வில் திரைப்பட இயக்​குநர் மாரி செல்​வ​ராஜுடன் எழுத்​தாளர் ஸ்டா​லின் ராஜாங்​கம் உரை​யாடி​னார். இந்த தமிழ் அமர்வு பார்​வை​யாளர்​களிடையே பெரும் வரவேற்​பைப் பெற்​றது.

‘ஹார்ட் லேம்ப்' நூலுக்​காக கடந்த 2025-ம் ஆண்​டில் சர்​வ​தேச புக்​கர் பரிசு பெற்ற கன்னட எழுத்​தாளர் பானு முஷ்​தாக், எழுத்​தாள​ரும் எம்​.பி.​யு​மான சசி தரூர் ஆகியோர் தனித்​தனி அமர்​வு​களில் கலந்​துரை​யாடினர்.

நேற்று காலை நடை​பெற்ற ஒரு அமர்​வில் செஸ் கிராண்ட் மாஸ்​டர் விஸ்​வ​நாதன் ஆனந்த், கே.சி.​விஜயகு​மாருடன் செஸ் குறித்து கலந்​துரை​யாடி​னார். மாலை​யில் நடை​பெற்ற மற்​றொரு அமர்​வில் பெரி​யார் குறித்து பேராசிரியர் ஆ.இ​ரா.வேங்​க​டாசலப​தி​யுடன் கவிதா முரளிதரன் கலந்​துரை​யாடி​னார்.

பல்​வேறு ஆளு​மை​கள் பங்​கேற்ற ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ இலக்​கி​யத்​ திரு​விழா நேற்​று நிறைவடைந்​தது.

SCROLL FOR NEXT