இலக்கியம்

புத்தகத் திருவிழா 2022 | ஆஹா! - கவிதாயுதம்

செய்திப்பிரிவு

தமிழ்க் கவிதை வரலாற்றின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான ஈழக் கவிஞர் சிவசேகரத்தின் இதுவரையிலுமான கவிதைகள் முழுத் தொகுப்பாக வெளிவந்துள்ளன.
80-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் சிவசேகரம், இடதுசாரி மரபில் காலூன்றிய கவிஞர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் அடக்குமுறைச் சக்திகளுக்கு எதிராகவும் தன்னுடைய கவிதையை ஓர் ஆயுதமாகச் சுழற்றியவர். தனித்துவமான கவிதைப் பாணி கொண்ட அவரது கவிதைகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டு, லண்டனிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பாரதி புத்தகாலயம் விநியோகிக்கிறது.

சிவசேகரம் கவிதைகள்
(1973-2020)
முழுத் தொகுப்பு
சமூகம் இயல் பதிப்பகம், லண்டன்
விலை: ரூ.500 (இந்தியா)

SCROLL FOR NEXT