இலக்கியம்

நூலிலிருந்து...: தேநீர் மேசை

செய்திப்பிரிவு

இக்கட்டுரைகளை எழுத அமர்ந்தபோது ஊர்நினைவுகள் பனிமூட்டமெனப் பெருகி என்னைச் சூழ்ந்துகொண்டன.இப்போது ஊர் என்னிடம் மேலும் பிரியம் கொண்டு விட்டது. இவற்றை எழுதிக்கொண்டிருந்த போது ஊரைப் பற்றியும் ஊரிலிருந்த மனிதர் களைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ளாமல் விட்டது எவ்வளவோ என்ற மலைப்பு உருவா னது. ஊரைப் பற்றி அறிந்துகொள்ளாதது நம் பெற்றோர் குறித்தும் மூதாதையரைக் குறித்தும் அறிந்துகொள்ளாததைப் போன்றது என்பேன்.

இக்கட்டுரைகளைப் படிக்கிறவர்களுக்கு அவரவரது சொந்த ஊரைப் பற்றிய ஞாபகங்கள் உயிர்பெற்றால், அதுவே என் மகிழ்ச்சி.

- அழகிய பெரியவன்

தேநீர் மேசை (கட்டுரைகள்)
அழகிய பெரியவன்
விலை: ரூ. 70
வெளியீடு: நற்றிணை பதிப்பகம், சென்னை-05.
தொடர்புக்கு: 044-2848 2818
மின்னஞ்சல்: natrinaipathippagam@gmail.com

          
SCROLL FOR NEXT