வாழ்வியல்

தெருநாய் பிரச்சினைக்கு தீர்வு கண்டறிய வேண்டும்: நடிகை நிவேதா பெத்துராஜ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‎தெரு​நாய்​கள் பிரச்​சினை தொடர்​பாக மக்​களுக்கு அச்​சம் ஏற்​படுத்​து​வதை​விட அதற்கு தீர்வு கண்​டறிவது மேலானது என நடிகை நிவேதா பெத்​து​ராஜ் தெரி​வித்​தார்.

தெரு​நாய்​களை பாது​காக்​கக்கோரி சென்னை எழும்​பூர் லேங்ஸ் கார்​டன் சாலை​யில் ஹெவன் ஃபார் அனிமல்ஸ் என்ற என்​ஜிஓ சார்​பாக அமை​திப் பேரணி நடை​பெற்​றது. ‎இதில் நடிகை நிவேதா பெத்​து​ராஜ், நடன இயக்​குநர் ராபர்ட் மற்​றும் விலங்கு நல ஆர்​வலர்​கள் பலர்கலந்​து​கொண்​டனர். பேரணி​யில் இரண்டு பசு மாடு​களை​யும் அழைத்து வந்​திருந்​தனர்.

பேரணி​யில் பங்​கேற்​றவர்​கள், நாய்​களை பொது இடங்​களில் இருந்து அகற்ற வேண்​டும் என்ற உச்ச நீதி​மன்ற தீர்ப்​புக்கு எதி​ராக​வும் தெரு நாய்​களுக்கு எதி​ராக நடை​பெறும் வன்​முறை​களை கண்​டித்​தும் கோஷங்​களை எழுப்​பினர்.

‎செய்​தி​யாளர்​களிடம் நிவேதா பெத்​து​ராஜ் கூறிய​தாவது:‎நம் கண் முன்​னால் விலங்​கு​கள் கொடுமைப்​படுத்​தப்​படு​வதை பார்த்து வரு​கிறோம். தெரு நாய்​களை வலுக்​கட்​டாய​மாக அகற்றி காப்​பகங்​களில் அடைத்து வைக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் அளித்த தீர்ப்பை எங்​களால் பார்த்​துக் கொண்டு இருக்க முடி​யாது. இந்​தப் பிரச்​சினைக்கு மிக​வும் சுலப​மான வழி​யாக இருப்​பது தெரு நாய்​களுக்கு தடுப்​பூசிகள் போட்டு அவற்றை அதே இடத்​தில் மீண்​டும் விட்​டு​விட வேண்​டும்.

‎‎தெரு நாய்​கள் தொடர்​பாக மக்​களிடையே அதி​கள​வில் தேவை​யில்​லாத அச்​சத்தை ஏற்​படுத்தி வரு​கின்​றனர். நாய்​கள் மனிதர்​களை கடிப்​பதும் ஏற்​றுக்​கொள்ள முடி​யாது, ரேபிஸ் நோய் தொற்று அதிக அளவில் பரவி வரு​கிறது. அதுகுறித்து மக்​களுக்கு அச்​சம் ஏற்​படுத்​து​வதை​விட அதற்கு ஒரு தீர்வு கண்​டறிவது மேலானது. ‎இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT