இந்தியா

நக்சலைட்கள் மிரட்டிப் பறித்த பணத்தில் சென்னையில் மருத்துவம் படித்த பெண்

ரூ.1.31 கோடி கட்டணம் செலுத்தியதாக என்ஐஏ விசாரணையில் தகவல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நக்சலைட்​கள் மிரட்​டிப் பறித்த பணத்​தில் பெண் ஒரு​வர் சென்​னை​யின் பிரபல தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் முடித்​துள்​ளார். இதில் கட்​ட​ண​மாக ரூ.1.31 கோடி செலுத்​தப்​பட்​டுள்​ள​தாக பிஹார் நீதி​மன்​றத்​தில் என்ஐஏ தெரிவித்துள்ளது.

பிஹாரின் மகத மண்​டலப் பகு​தி​யில் தடை செய்​யப்​பட்ட நக்​சலைட் இயக்​க​மான சிபிஐ (மாவோ​யிஸ்ட்) செயல்​பட்டு வந்​தது. அப்​போது அமைப்​பின் விரி​வாக்​கம் உள்​ளிட்ட காரணங்​களுக்​காக பிஹார் மற்​றும் ஜார்க்​கண்ட் அரசு ஒப்​பந்​த​தா​ரர்​கள் மற்​றும் கட்​டு​மான நிறு​வனங்​களை மிரட்டி பணம் வசூலிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்கை என்ஐஏ விசா​ரித்து வரு​கிறது. இதில் மிரட்​டிப் பறித்த பணத்​தைப் பயன்​படுத்​தி, மாவோ​யிஸ்ட் ஒரு​வர் தனது தங்​கையை சென்​னை​யில் உள்ள செட்​டி​நாடு மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் எம்​பிபிஎஸ் படிக்க வைத்​தது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

சிபிஐ மாவோ​யிஸ்ட் அமைப்​பினர் பிஹார் மற்​றும் ஜார்க்​கண்ட் சிறப்​புப் பகு​திக் குழு​வின் உறுப்​பினர் பிரத்​யுமன் சர்​மா. இவர் தத்து எடுத்து வளர்த்த மகனாக தருண் குமாரும் ஒரு நக்​சலைட் ஆவார். இந்த தருண் குமாரின் சகோ​தரி பூஜா குமாரி, தமிழ்​நாட்​டின் ஒரு சிறந்த மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் படிக்க விரும்​பி​யுள்​ளார். ஆனால் அதற்​கானக் கட்​ட​ணத் தொகை அவர்​களிடம் இல்​லை. இதை பிரத்​யுமனிடம் தருண் குமார் கூறி​யுள்​ளார். இதையடுத்து பிரத்​யுமன், நக்​சலைட் அமைப்​பின் பெயரில் பலரிடம் மிரட்​டிப் பறித்த பணத்​தில் ரூ.1.31 கோடி அளித்​துள்​ளார். இந்​தப் பணத்​தில் பூஜா குமாரி, கடந்த 2017-2022 கல்​வி​யாண்​டில் எம்​பிபிஎஸ் முடித்​துள்​ளார்.

இந்த சம்​பவத்​தில் பிஹார் உயர் நீதி​மன்​றத்​தில் என்ஐஏ ஒரு பிர​மாணப் பத்​திரம் தாக்​கல் செய்​துள்​ளது. இதில், சம்​பவத்தை விளக்​கிய என்​ஐஏ, சென்​னை​யின் மருத்​து​வக் கல்​லூரிக்கு செலுத்​தப்​பட்ட தொகை​யில் ரூ.1,13,70,500 முடக்​கப்​பட்​டுள்​ள​தாக தெரி​வித்​துள்​ளது.

விசா​ரணை​யில் சிக்​காமல் இருக்க, மருத்​து​வக் கல்​லூரிக்​கான தொகையை நேரடி​யாக செலுத்​தாமல் இடைத்​தரகர்​கள் அல்​லது உதவி​யாளர்​களின் வங்​கிக் கணக்​கு​கள் மூலம் செலுத்​தப்​பட்​டுள்​ள​தாக என்ஐஏ தெரி​வித்​துள்​ளது.

தருண் குமார், மகத பிராந்​தி​யத்​தில் சிபிஐ மாவோ​யிஸ்ட் அமைப்பை மீண்​டும் நிலைநிறுத்​து​வ​தில் ஒரு முக்​கிய இணைப்​பாகச் செயல்​பட்​டுள்​ளார். பிஹார் மற்​றும் ஜார்க்​கண்​டின் மகத மண்​டலத்​தில், மாவோ​யிஸ்ட்​களுக்​கும் பிற குழுக்​களுக்​கும் இடையே ஒரு முக்​கிய பால​மாக பணி​யாற்​றி​னார். கைதாகி உள்ள இவரைப் பற்​றிய தகவல்​கள், என்​ஐஏ-​வால் பாது​காக்​கப்​பட்ட சாட்​சி​யங்​கள் அளித்​த வாக்​குமூலங்​களில்​ தெரியவந்​துள்​ளது.

SCROLL FOR NEXT