அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

 
இந்தியா

“நாட்டின் கோதுமை உற்பத்தி புதிய சாதனை படைக்கும்” - அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய வேளாண் ஆராய்ச்சி கழகத்​தின் (ஐசிஏஆர்) நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்ற மத்​திய வேளாண் துறை அமைச்​சர் சிவ​ராஜ் சிங் சவு​கான், செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது:

தற்​போது கோது​மைப் பயிர் நல்ல நிலை​யில் உள்​ளது. எந்த சேத​மும் இல்​லை. சாகுபடி பரப்​பளவு அதி​கரிப்பு மற்​றும் சாதக​மான பயிர்ச் சூழல் காரண​மாக, நாட்​டின் கோதுமை உற்​பத்தி கடந்த ஆண்​டின் சாதனை​யான 117.94 மில்​லியன் டன்னை விட அதி​க​ரித்து புதிய சாதனை படைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஐசிஏஆர் தலைமை இயக்​குநர் எம்​.எல்​.ஜாட் கூறுகை​யில், ‘‘கோ​துமை சாகுபடிப் பரப்​பளவு 33 மில்​லியன் ஹெக்​டேரைக் கடந்​து​விட்​டது. தற்​போதைய நில​வரப்​படி பயி​ரின் நிலை மிக நன்​றாக உள்​ளது. எனவே கோதுமை உற்​பத்தி 120 மில்​லியன் டன்னை எட்ட வாய்ப்​புள்​ளது. சரி​யான நேரத்​தில் மற்​றும் முன்​கூட்​டியே விதைக்​கப்​பட்​டதே இதற்கு காரணம்’’ என்​றார்.

2025-26 ரபி பரு​வத்​தில் ஜனவரி 2-ம் தேதி நில​வரப்​படி, கோதுமை சாதனை அளவாக 33.41 மில்​லியன் ஹெக்​டேர் பரப்​பள​வில் பயி​ரிடப்​பட்​டுள்​ளது. இது முந்​தைய ஆண்டு இதே கால​கட்​டத்​தில் பயி​ரிடப்​பட்ட 32.80 மில்​லியன் ஹெக்​டேரை விட அதி​கம் என்று வேளாண் அமைச்சக தரவு​கள் தெரிவிக்​கின்​றன.

SCROLL FOR NEXT