இந்தியா

அவை விதி 267-ன் வரம்புகள் என்ன? - மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் விளக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாநிலங்​களவை விதி 267-ன் வரம்​பு​கள் குறித்து அவைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் நேற்று விரி​வான விளக்​கம் அளித்​தார்.

மாநிலங்​களவை விதி 267-ன் கீழ் எம்​பிக்​கள் அவை​யில் ஒரு தீர்​மானத்தை முன்​மொழிய​லாம். இந்த விதி​யின் கீழ் ஒரு தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டால் அன்​றைய தினம் மாநிலங்​களவை அலு​வல்​களை ஒத்​தி​வைத்​து​விட்டு குறிப்​பிட்ட தீர்​மானம் மீது விவாதம் நடத்​தப்​படும். எனினும் இந்த விதியை அமல்​படுத்த மாநிலங்​கள​வைத் தலை​வரின் ஒப்​புதல் அவசி​ய​மாகும்.

வாக்​காளர் பட்​டியல் தீவிர திருத்​தப் பணி தொடர்​பாக மாநிலங்​களவை​யில் விவாதம் நடத்​தக் கோரி விதி 267-ன் கீழ் 21 நோட்​டீஸ்​கள் அளிக்​கப்​பட்​டன. இந்த நோட்​டீஸ்​களை மாநிலங்​கள​வைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் கடந்த 2-ம் தேதி நிராகரித்​தார். இதற்கு மாநிலங்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் மல்​லி​கார்ஜு கார்கே கடும் ஆட்​சேபம் தெரி​வித்​தார். விதி 267 விவ​காரம் மாநிலங்​களவை​யில் நேற்​றும் எதிரொலித்​தது. அப்​போது இந்த விதி​யின் வரம்​பு​கள் குறித்து அவைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் கூறிய​தாவது:

மாநிலங்​களவை விதி 267, கடந்த 2000-ம் ஆண்​டில் திருத்​தம் செய்​யப்​பட்​டது. அப்​போதைய மாநிலங்​கள​வைத் தலை​வர் கிருஷ்ணன் காந்த், உறுப்​பினர்​கள் மன்​மோகன் சிங், பிரணாப் முகர்​ஜி, அருண் ஜேட்​லி, வெங்​கய்ய நாயுடு, பாலி எஸ். நாரிமன் ஆகியோர் அடங்​கிய குழு விதி 267-ல் மாற்​றங்​களை செய்​தது.

அப்​போது இந்த விதியை யாரும் தவறாக பயன்​படுத்​தாமல் இருக்க தேவை​யான அம்​சங்​கள் சேர்க்​கப்​பட்​டன. இதன்​படி மாநிலங்​களவை​யில் ஏற்​கெனவே பட்​டியலிடப்​பட்ட விவ​காரங்​கள் குறித்து மட்​டுமே விதி 267-ன் கீழ் விவாதம் நடத்த முடி​யும். இதர விவ​காரங்​கள் குறித்து விவாதம் நடத்த முடி​யாது. தற்​போதைய சூழலில் மாநிலங்​களவை அலு​வல்​களை முடக்க விதி 267-ன் கீழ் தின​மும் நோட்​டீஸ்​கள் வழங்​கப்​படு​கின்​றன. இது தவறான அணுகு​முறை ஆகும்.

மிக​வும் அரி​தான விவ​காரங்​கள் தொடர்​பாக மட்​டுமே விதி 267-ஐ பயன்​படுத்த வேண்​டும். கடந்த 1988 முதல் 2000 வரையி​லான காலத்​தில் இந்த விதி​ப்படி 3 நோட்​டீஸ்​கள் மட்​டுமே ஏற்​கப்​பட்​டன. கடந்த 2000-ம் ஆண்​டுக்​குப் பிறகு 267-வது விதி​யின்​ கீழ் 8 விவ​காரங்​கள் மட்​டுமே ஒரு​மித்த கருத்​துடன் ஏற்​கப்​பட்​டன. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

விதி 267 தொடர்​பாக மாநிலங்​களவை​யில் நேற்று ஆளும்​ கட்​சி மற்​றும்​ எதிர்க்​கட்​சிகளிடையே கார​சா​ர​மான வாக்​கு​வாதம்​ நடைபெற்​றது.

SCROLL FOR NEXT