மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி : கோப்புப்படம் 
இந்தியா

மேற்கு வங்கத்தில் ஓய்ந்தது 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம்

வெற்றி மயிலோன்

கொல்கத்தா: மேற்கு வங்​க சட்டப்பேரவைக்கு நாளை மறுதினம் (ஏப்.29) நடை​பெறவுள்ள இரண்​டாம் கட்ட தேர்தலுக்​கான பிரச்​சா​ரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

மேற்கு வங்​க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 2 கட்​ட​மாக நடைபெறுகிறது. முதல்​கட்​ட​மாக கடந்த 23-ம் தேதி 152 தொகு​தி​களில் வாக்​குப்​ ப​திவு நடை​பெற்​றது. முதல்கட்ட தேர்தலில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின. மீத​முள்ள 142 தொகு​தி​களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நாளை மறுதினம் (ஏப்​.29) நடை​பெற உள்​ளது. இந்நிலையில், அங்கு தேர்​தல் பிரச்​சா​ரம் நிறைவடைந்தது.

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி (டிஎம்சி) தொடர்ந்து 3-வது முறையாக மேற்கு வங்கத்தை ஆள்கிறது. மேற்கு வங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது.

இம்முறை மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக, இடது முன்னணி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி தனித்தனியாக போட்டியிடுகின்றன. நான்கு முனைப்போட்டி நிலவினாலும், திரிணமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT