மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

 
இந்தியா

‘இண்டி’ கூட்டணிக்கு விடைகொடுத்த 7 ஆம் ஆத்மி எம்.பி.க்களை வரவேற்கிறேன்: கிரண் ரிஜிஜு கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்​சியில்​ இருந்து விலகி பாஜக​வில் இணைந்த ராகவ் சத்தா உள்​ளிட்ட 7 மாநிலங்​களவை உறுப்பினர்களை வரவேற்​ப​தாக நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு நேற்று தெரி​வித்​தார்.

இது குறித்து நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறியிருப்பதாவது: ”ராகவ் சத்தா உள்​ளிட்ட 7 எம்​.பி.க்​கள் ஆம் ஆத்மி கட்​சியி​ல் இருந்து வில​கி, பாஜவுடன் இணைவதை மாநிலங்கள​வைத் தலை​வர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்றுக்கொண்​டார்.

இப்​போது, ராகவ் சத்​தா, சந்​தீப் பதக், அசோக் மிட்​டல், ஹர்​பஜன் சிங், சுவாதி மாலி​வால், ரஜிந்​தர் குப்தா மற்​றும் விக்​ரம்​ஜித் சிங் சாஹ்னி ஆகியோர் பாஜக உறுப்​பினர்​களாக உள்​ளனர். நீண்ட கால​மாக நான் கவனித்த வகை​யில், இந்த 7 எம்​.பி.க்​களும் அவதூறான வார்த்​தைகளைப் பயன்​படுத்​தி​ய​தில்​லை, ஒருபோதும் ஒழுக்​கமின்​மை​யையோ அல்​லது நாடாளுமன்றத்துக்குப் புறம்​பான நடத்​தையையோ வெளிப்படுத்தி​ய​தில்​லை.

‘துக்​கடே-துக்​கடே' ‘இண்​டி' கூட்​ட​ணிக்கு விடை​கொடுத்​து​விட்​டு, பிரதமர் மோடி​யின் தொலைநோக்கு தலை​மை​யின் கீழ் தேசத்தைக் கட்​டி​யெழுப்​பும் என்​டிஏ கூட்​ட​ணி​யில் இணைந்துள்ள உங்​களை வரவேற்​கிறேன். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT