இந்தியா

டெல்லி குண்டுவெடிப்பில் தேடப்படுபவர் அல் பலா பல்கலையில் படித்தவர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​ கார் குண்டுவெடிப்பு வழக்கில் ஹரி​யானாவின் அல் பலா பல்​கலைக்​கழகத்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்​ளது.

இந்​நிலை​யில், அல் பலா பல்​கலைக்​கழகத்​துக்கு நீண்ட கால​மாகவே தீவிர​வாத தொடர்பு இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஜெய்ப்​பூர், அகம​தா​பாத், டெல்​லி, கோரக்​பூரில் நிகழ்ந்த தொடர் குண்​டு​வெடிப்பு சம்​பவங்​களில் தொடர்​புடைய மிர்ஸா ஷதாப் பெய்க், அல் பலா பல்​கலைக்​கழகத்​தின் முன்​னாள் மாணவர் என தெரிய​வந்​துள்​ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஆசம்​கர் மாவட்​டத்​தைச் சேர்ந்த இவர் கடந்த 2007-ம் ஆண்டு அந்த பல்​கலைக்​கழகத்​தின் பொறி​யியல் கல்வி நிறு​வனத்​தில் பி.டெக்​.(எலக்ட்​ரானிக்​ஸ்) படிப்பை முடித்​துள்​ளார்.

இந்​தி​யன் முஜாகிதீன் தீவிர​வாத அமைப்​பைச் சேர்ந்​தவ​ரான இவர், இந்த குண்​டு​வெடிப்பு சம்​பவங்​களுக்​குப் பிறகு தலைமறை​வா​னார். இதையடுத்​து, அவர் தேடப்​படும் குற்​ற​வாளி​யாக அறிவிக்​கப்​பட்​டார். இப்​போது அவர் சவுதி அரேபி​யா​வில் வசித்து வரு​வது தெரிய​வந்​துள்​ளது.

SCROLL FOR NEXT